Sunday, February 14, 2010

♥ : இனிய தோழிக்கு

பிரியமானவளே!
திடீரென ஒரு நாள்
பிடித்திருக்கிறதென்றாய்,
எதை? என்றேன்
என் எழுத்துக்களை என்றாய்.

பார்க்கவேண்டுமென்றாய்
படத்தை அனுப்பினேன்
பிடித்திருக்கிறதா? என்றேன்,
பதில் சொல்லாமல்
நீ மொளனமானாய்.

கலக்க வேண்டுமென்றாய்
கலகம் வருமென்றேன்
உன் உடம்பில்லையென்றால்
உயிரைவிடுவேன் என்றாய்,
நான் மொளனமானேன்.

பிரியமனமில்லாமல்
பிரிந்து சென்றாய்
தொலைபேசியை
தொல்லை பேசியாக்கினாய்.

வீட்டிற்கு வந்தாய்
நல்ல வேலையிலிருக்கும்
என் தம்பியை பார்த்தவுடன்
நான் வேலையற்றவன்
என்றாய், தமையனை விட
கருப்பு என்றாய்.

சூரியன் சுட்டெரிக்கும்
நாட்டின் தேசிய நிறம்
நான் என்றேன்
தம்பி மட்டும் சிகப்பு
எப்படி என? குடும்ப
ஆராய்ச்சி செய்தாய்.

ஏண்டி கல்யாணத்திற்கு
தேவை சிகப்பு கலரா
இல்லை
வெள்ளை மனமா?

திடீரேன விவாகரத்து
கேட்கின்றாய்?
அடி, கூறுகெட்டவளே?
கல்யாணம் ஆனால் சரி!
உன் மேல உள்ள
காதலுக்கு எப்படிடி
விவாகரத்து தருவது?????
 by yours RAJAN

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment