
இரண்டு நபர்கள், ஒரு அமெரிக்கன், ஒரு இந்தியன் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியன் அமெரிக்கனைப் பார்த்து,
" உங்களுக்குத் தெரியுமா? எனது பெற்றோர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி, ஹோம்லி பொண்ணுன்னு சொல்லி ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. நான் ஒரு தடவைக் கூட அவளை சந்திச்சதே இல்லை. நாங்க இதைத்தான் அரேஞ்ஜுடு மேரேஜ்னு சொல்லுவோம். நான் விரும்பாத பெண்ணையோ அல்லது எனக்குத் தெரியாத பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தெளிவாகச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இப்போ பாருங்க ஏகப்பட்ட குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்"
இதைக் கேட்ட அமெரிக்கன்,
" காதல் கல்யாணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா, என் கதையை சொல்றேன் கேளுங்க.
நான் ஒரு விதவையை ரொம்ப ஆழமா ஒரு மூன்று வருடம் காதலிச்சு, டேட்டிங்கெல்லாம் போனப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சில வருடங்களுக்குப் பின் என்னோட அப்பா, என்னுடைய ஸ்டெப் டாட்டர் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்துக் கொண்டார். அதனால எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளையாகிவிட்டார், நான் அவருக்கு மாமனார் ஆகிவிட்டேன்.
சட்டப்படி பார்த்தோம்னா, என் மகள் எனக்கு அம்மாவாகவும், என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள்.
ரொம்ப பிரச்சனை எப்போ வந்துச்சுன்னா, எனக்கு மகன் பிறந்தப்போ. என்னோட பையன் எங்க அப்பாவுக்குத் தம்பி முறை ஆகிவிட்டதால், எனக்கு அவன் சித்தப்பா ஆகிவிட்டான்.
பிரச்சனை ரொம்ப ரொம்ப பெருசு ஆனது எப்போன்னா, எங்க அப்பாவுக்கு பையன் பிறந்தப்போ. என்னோட அப்பாவோட பையன் அதாவது என் தம்பி எனக்கு பேரன் ஆகிவிட்டான்.
கடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.
நீங்க என்னடான்னா, உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்குன்னு சொல்லறீங்க!!!!"
BY YOURS RAJAN
-- KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment