செங்கல்பட்டு ஏதிலிகள் சிறப்பு முகாமிற்குள் வழக்கறிஞர் செல்வதற்கு அனுமதி மறுப்பு
[ ஆடியோ] காவற்துறையினரின் அடாவடிக்கு ஆளாகி அனாதைகளாக செங்கல்பட்டு எதிலிகள் முகாமில் அல்லற்படும் எமது உறவுகளை சென்று பார்வையிட வழக்கறிஞர் புகழேந்தி அவர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காவற்துறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுமதி கேட்கும் போது தமிழக அரசிடம் அனுமதி பெற்றால் மட்டுமே உள்நுழைய அனுமதி தரப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் செங்கல்பட்டு முகாமில் இருக்கும் காவற்துறையினரிடமே அனுமதி பெற்று சென்று வந்திருக்கிறோம் அங்கு ஒரு வழக்கு இருக்கிறது என்று கூறியதற்கு அவர்கள் தெரியாமல் அனுமதி கொடுத்திருக்கிறார்கள் அவ்வாறு அனுமதி கொடுக்கமுடியாது. தமிழக அரசிடம் அனுமதி பெற்றால் தான் உள்ளே செல்ல முடியும் என்றும் என்ன காரணமாக இருந்தாலும் உள்ளே போவதற்கு அனுமதிக்க முடியாது என்று வழக்கறிஞரை எச்சரிக்கும் தொனியில் காவற்துறையினர் தெர்வித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாசில்தார்களை கேட்டு அனுமதி தரும்படி கூறியதற்கு அவர்களை கேட்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அனுமதி கொடுக்க முடியாது என்றும் அந்த காவற்துறை அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
Read more: http://meenakam.com/?p=5920#ixzz0f73BZrGf
"மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் எங்கள் தமிழ்மண் குளிக்கும்"....
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment