
ஐம்பதுபைசாவுக்கு
அச்சு வெல்லம்
இருபது பைசாவுக்கு
எள்ளுருண்டை
நாலணாவுக்கு
நெல்லிகாய்
வாங்கடா என் பேரனுங்களா
நீங்கல்லாம் ஒழுங்கா
பள்ளிகூடத்துக்கு வரணும்,
இந்த பாட்டிக்கிட்ட
திங்கறதுக்கு வாங்கணும்..
மிட்டாயும் கேட்காமல்
பள்ளி செல்ல வழியுமின்றி
ஏக்கத்தோடு
பார்த்துக்கொண்டிருக்கிறான்
அந்த பாட்டியின்
எட்டு வயது பேரன்.
by yours RAJAN 
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment