Thursday, February 4, 2010

♥ : உழைப்பின் உயர்வு

உழைப்பின் உயர்வு! Print E-mail
http://tamilvishai.com/home/wp-content/uploads/2009/09/taj20mahal203.jpgதாஜ்மஹாலைக் காணுகையில்

சிந்தையில் உதிப்பது ஷாஜஹானல்ல!

உழைப்பாளியே உனது

உன்னதமான உழைப்புத்தான்!

கோவில்களைக் காணுகையில்

கடவுளர் தெரிவதில்லை.......

சிற்பிகளின் உழைப்புத்தான்

சிந்தையில் உதிக்கிறது!

சோறு நான் உண்கையிலே

சம்சாரத்தை நினைப்பதில்லை....

விவசாயியே உந்தன்

வியர்வைதான் நினைவுக்கு வருகிறது!

ஆடை அணிந்திருக்கும்

ஆள் எனக்குத் தெரிவதில்லை....

நெசவாளியே நீதான்

தெரிகிறாய் என் சிந்தைக்கு!

ஒவ்வொன்றிலும் தெரிவது

உழைப்பின் உயர்வே!
 BY YOURS RAJAN 

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment