On Dec 23, 7:37 am, sk natarajan <sknatarajan...@gmail.com> wrote:
> *என் இனிய மனைவிக்கு *
>
>
>
>
>
> > *நினைத்துத் தான்
> > பார்க்கின்றேன் என்
> > வாழ்வில் உந்தன்
> > இனிய வரவை
>
> > நெகிழ்ச்சி யூட்டிய
> > ஒரு நாளில்
> > பலர் வாழ்த்த
> > நின் கரம் பற்றினேன்
>
> > அந்நாள் தொட்டு
> > இந்நாள் வரை
> > இணைந்து நடத்திய
> > இல்லறம் இன்பமே
>
> > ஏற்றமும் உண்டு
> > இறக்கமும் உண்டு
> > ஏறி இறங்காதது
> > அன்பு மட்டுமே
>
> > மழலையர் மடிமீது
> > களிப்புற விளையாடிட
> > இம்மகிழ்விற்கு நிகர்
> > ஈடேது இணையேது
>
> > என்னில் உன்னையும்
> > உன்னில் என்னையும்
> > கண்ட பின்
> > களிப்பிங்கே மிகுந்ததே
>
> > அயராத உன் அன்பில்
> > ஆடித்தான் போனேனடி
> > ஆதரவாய் நீயிருக்க
> > என்னுலகம் வேறேதடி
>
> > தோழியாய் தொடர்ந்தாய்
> > தாதியாகவும் ஆனாய்
> > தாயாகவும் பரிமளிக்க
> > உன்னால் மட்டுமே முடியுமடி
>
> > இத்தனையும் இயல்பாய்
> > இசைத்த உன்னை
> > நான் இதயத்தின்
> > உச்சத்தில் வைக்கவா
>
> > வாழ்க்கையின் மிச்சத்தில்
> > உனக்கு சேயாக
> > நான் மாறி நித்தமும்
> > சேவகம் புரிந்திடவா
>
> > என் இதயங்கவர்ந்த கள்ளி
> > என் வேண்டுகோளை அள்ளி
> > என்ன வேண்டுமென சொல்லி
> > என் கடன் தீர்ப்பாயடி துள்ளி
>
> > என்றும் அன்புடன்
> > சா.கி.நடராஜன்.
> >http://tamizhswasam.blogspot.com/*- Hide quoted text -
>
> - Show quoted text -
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in
Thursday, December 24, 2009
♥ : Re: என் இனிய மனைவிக்கு --- சா.கி.நடராஜன்.
sagikkala..........pondatti dasan.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment