Thursday, December 24, 2009

♥ : அயல்தேசத்து ஏழை...


 







http://i26.tinypic.com/4javyv.jpg

http://i50.tinypic.com/110d2ko.jpg
Punnagai J


"I'm willing to admit that I may not always be right, but I am never wrong."
Punnagai J


 

 
அயல்தேசத்து ஏழை
Join Only-for-tamil


இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின்
..
கண்ணீர் அழைப்பிதழ்
!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது
!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
...
வாசனைகள் இருக்கலாம்
!
ஆனால்
வாழ்க்கையில்
...?

தூக்கம் விற்ற காசில்தான்
...
துக்கம் அழிக்கின்றோம்
!
ஏக்கம் என்ற நிலையிலேயே
...
இளமை கழிக்கின்றோம்
!

எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்
...
®'
ரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்
!
மரஉச்சியில் நின்று
...
®'
ரு
தேன் கூட்டை கலைப்பவன் போல
!

வாரவிடுமுறையில்தான்
..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை
!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன
!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன
!

பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்

®'
ரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது
!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா
- பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள்
!
®'
வ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட்
!
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்
...
விசாவும் பாஸ்போட்டும் வந்து
...
விழிகளை நனைத்து விடுகிறது
.!

வீதிகளில்
®'ன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில்
!
மாப்பிள்ளை அலங்காரம்
!
கூடிநின்று கிண்டலடித்தல்
!
கல்யாணநேரத்து பரபரப்பு
!
பழையசடங்குகள் மறுத்து போராட்டம்
!
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள்
!
சாப்பாடு பரிமாறும் நேரம்
...
எனக்கு நிச்சயித்தவளின்
®"ரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை
!
இவையெதுவுமே கிடைக்காமல்

"
கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக
...
சங்கடத்தோடு

®'
ரு
தொலைபேசி வாழ்த்தூனூடே
...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ
..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன
?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்
!
காற்றிலும்
- கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்
...
நண்பர்களின்
.
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்
...
ஆறுதல் தருகிறது
!

ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்
...
®'
ரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே
... கரைந்துவிடுகிறார்கள்;!
"
இறுதிநாள் " நம்பிக்கையில்தான்....
இதயம் சமாதானப்படுகிறது
!

இருப்பையும்
- இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்
...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்
...
முதல் பேச்சு
...
முதல் பார்வை
...
முதல் கழிவு
...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும்
- திர்ஹமும்
தந்துவிடுமா
?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை
...
தொலைபேசியில் கேட்கிறோம்
!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ
?

®'
வ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்
...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை
...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு
.
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்
...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு
...

மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும்



Join Only-for-tamil
Join Only-for-tamil
நானும் ஓர்  அயல் தேசத்து ஏழையே
நினைவிலும் நிஜத்திலும்..

__._,_.___


 




--


if we can't love the person whom we see,
how we can love god, whom we can't see...

regards
santhosh  
0065 8261 7977
0091 99529 85013

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment