Tuesday, February 16, 2010

Re: ♥ : கோடைக் குளிர்நகர்

பழைய பண்பாட்டில்
புதிய வடிவம் ...!
தெளிந்த நல் தேன் அமுதம்...!! 


 
2010/2/17 m rajan <kmurajan@gmail.com>

முகிற்குடையின் கீழுறங்கும் சோலை - புல்லில் 
முத்தமிடும் பனிமுத்து மாலை - பனித் 
துகில்விலக்கிப் பூவழகைச் சுவையாகச் சொல்லத்தான் 
சுகமாக விடியுமதி காலை - அதைச் 
சொல்லாமல் எனக்கென்ன வேலை? 
பொற்சுவட்டுப் பூப்பூமி மீது - மெல்லப் 
பூத்த பனி திரைபோடும் போது - நெஞ்சம் 
சொற்கனவுப் பந்தலுக்குள் சொக்கிநட மாடிதினம் 
சொல்லிவிடும் கற்பனைக்குத் தூது - அதைச் 
சொல்லிவைக்க வார்த்தை கிடையாது 
மீனேறி நிலம்பார்க்கும் ஏரி - சுற்றி 
மின்வெளியாய் நின்றமலர்ச் சேரி - அங்கே 
தேனேறி, தென்றலெனும் தேரேறிப் பனித்தளிர்கள் 
திசைபார்க்கும் வரவேற்புக் கூறி - ஆடும் 
செந்தோட்டம் மனத்தேரில் ஏறி 
கலைக்கோட்டத் தேனடைகள் பிழிந்து - மெல்லக் 
கனித்தோட்டச் சாலைகளில் வழிந்து - அந்த 
மலைமேட்டு மலர்ப்பள்ளம், மழைமேகப் பனிவெள்ளம் 
மதுபோலச் சொரிவதனால் குளிர்ந்து - பச்சை 
மணிபோலச் சிரித்திருக்கும் ஒளிர்ந்து

BY YOURS RAJAN

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment