Monday, February 8, 2010

Re: ♥ : மதம் பிடித்த மனிதன்...!!!

சரியாக சொன்னீர்கள்
பாலாஜி


2010/2/8 George Raj <jgeorgeraj@gmail.com>
Neenga solvathu allam appatamana unmai than. anaal, oru sila arasiyal vathigal idhaithan thangalauthu tholilaga merkondu makkalai ematri padaikkkirirarkal. enna soltringa neenga?


On 2/8/10, rajan s <rajan.7605@gmail.com> wrote:
இந்த உலகில் வாழும் அனைத்து மிருகங்களைவிட மிக கொடிய மிருகம் மதம்பிடித்த மனிதன்.

2010/2/8 m rajan <kmurajan@gmail.com>




முதலில் வைரமுத்துவின் பார்வையில் இந்துக் கடவுளான சிவன் எவ்வாறு உருவாக்கப் பட்டான் எனப் பார்ப்போம். வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசத்தில்" சிவன் என்பவன் யார் என விளக்கியுள்ளார்.

"மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விவசாயம்தான் முதலிடம் வகிக்கிறது. அந்த விவசாயத்திற்கு முக்கியமான விலங்காக மனிதன் மாடுகளைப் பயன் படுத்த தொடங்கினான். அப்படி தொடங்கிய முதல் மனிதனை மற்றவர்கள் பாராட்டி அவனுக்கு உருவம் தீட்டி, சிவன் என்று பெயரிட்டு கடவுளாக சித்தரித்ததாக கூறியுள்ளார்."

இன்று உலகெங்கும் பெரும்பாலும் பரவியிருக்கக் கூடிய மதங்கள் இந்து, கிறிஸ்த்தவம், இசுலாமியம். ஒவ்வொரு மதத்திலும் கடவுள் என்பவன் நன்மையை தரக் கூடியவன், நியாய தர்மங்கள் அறிந்தவன் என்பதுதான் கருப்பொருளாக சித்தரிக்கப் பட்டிருக்கும்.

இத்தகைய சித்தரிப்புகள் மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக சித்தரிக்கப் பட்டிருந்தாலும், மனிதனால் அவைகள் பிரித்துப் பார்க்கப் படுகிறது. இந்த பிரிவினைகள் அவரவர் மதங்களை வைத்தே உருவாக்கப் படுகின்றன.

இதுவும் தேர்தல் போலத் தான் நடக்கிறது. பெரும்பான்மை பெற்றவன் உயர்ந்தவன் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப் படுகிறான்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கொள்கை என்று சொல்லப் படும் "ஜிகாத்" என்ற வார்த்தையின் அர்த்தம் "புனிதப் போர்" என்பதாகும். உண்மையில் போர் என்பது புனிதமான ஒரு விசயமா???

இலங்கையில் பெரும்பாலானவர்களால் கடவுளாகக் கருதப் படுபவர் "புத்தர்". அவரது கொள்கைப் படி "மனிதன் என்பவன் ஆசைகளைத் துறந்தவனாக இருக்க வேண்டும்". அப்படி அந்தக் கொள்கையில் வாழ்பவன் தானா சிங்களத்தான்?? அப்படி என்றால் "எங்கள் தமிழ் சகோதரிகளின் கற்பு சூறையாடப் படுவதும் எங்கள் உறவுகள் கொல்லப் படுவதும்" ஆசையை துறந்தவர்கள் செய்யக் கூடிய காரியமா???

இன்றும் பல கோவில்களில் "தீண்டாமை" இருக்கத் தான் செய்கிறது. பல கோவில்களில் நான் கண்ட அறிவிப்பு பலகைகளில் "வேற்று மதத்தவர்கள் உள்ளே வரக்கூடது" என எழுதப் பட்டிருக்கும். ஏன் அந்தக் கடவுளுக்கு வேற்று மதத்தவர் "மனிதனாகத் தெரியவில்லையா???"

ஒரு சில கிறிஸ்த்தவர்கள் அவர்கள் மதத்தைப் பரப்புவதற்காக பலரையும் "மூலை சலவை" செய்து வருகின்றனர். கடவுள் என்பவன் கட்டாயப் படுத்தி நம்பவைக்கப் பட வேண்டுமா???

"உண்மையில் சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!! அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்."

மதம் என்பது யானைகளுக்கு மட்டும் தான் பிடிக்க வேண்டும்.....மனிதனுக்கு அல்ல........




--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment