கதிர்
காதலுடன் காத்திருப்பேன் --
எந்தனை ஆண்டுகள்
எந்தன் உயிர் உனை பார்த்ததுஇத்தனை ஆண்டுகளில்
எத்தனை முகங்கள் இடை வந்தன
எத்தனை முகங்கள் கதை பேசின
அதில் சில அழகிகளும் உண்டு
சில அசிங்கங்களும் உண்டுஆனால்
என் இதயத்தில் உருவாய்
ஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்
நினைவுகளின் எச்சம் மட்டும்
விழுங்கி உயிர்திருக்கும் - நீ
நீ மட்டும் மறைவதே இல்லை
இல்லை... இல்லை....
நான் மறப்பதே இல்லைஉண்மையில் ஐந்தோ, ஆறோ,
நான் பேசிய வார்த்தைகள்
உன்னிடம்ஆனால் கனவிலோ
கதையாகவும்
கவிதையாகவும் பேசியன
ஆயிரம் ஆயிரம்இது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல
உன் மேல் கொண்ட மனக்கவர்ச்சி
இடைப்பட்ட ஆண்டுகளில் நீ
எதிர்பட்டது ஒரு முறை
அந்த ஒரு முறையில்
நான்
மறுமுறை பிறந்தேன்சொல்லாமல் விட்டுவிட்டால்
செல்லாதே எனது காதல்போதும் ...
காதலோடு காத்திருந்த காலம் போதும்
கவிதைகளோடு வாழ்ந்திருந்த காலம் போதும்காதல் கவிதையே !
உன்னோடு வாழும் காலம் வேண்டும்
உன்னிடம் சொல்லிவிடலாம்
உன் காதலை அள்ளிவிடலாம் - என்று
அன்புடன் அருகில் வந்தேன்ஆனால்
உன் அன்னிய பார்வையில் என் ஆயுளையே
முடித்துவிட்டாயடி பெண்ணேஆயினும்
ஆண்டுகள் பல ஆயினும்
என் உயிர் என்னை விட்டு போகினும்
உதிரும் ஒவ்வொரு துளி சாம்பலாக
காற்றில் கலந்து காத்திருப்பேன்
காதலுடன் காத்திருப்பேன்
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment