Monday, February 8, 2010

♥ : இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!


பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம் !
***

நிம்மதியில்லை

என்றதும்
கோவிலுக்குப்
போகச்சொன்னான் நண்பன்!
போனேன்
முதன்முதலில்
அவளைப் பார்த்த
பேருந்து நிறுத்தத்திற்கு!


***

உள்ளாடையைத்
தேர்ந்தெடுக்கக்கூட
இவ்வளவு நேரமா?
நீயெல்லாம்
பெண் பார்க்கப்போனால்...

எத்தனை பெண்தான் பார்ப்பாயோ..
என்பார்கள் நண்பர்கள்!

அவர்களுக்கென்ன தெரியும்
பார்த்த முதல் வினாடியே
உன்னைத்
தேர்வு செய்துவிட்டேன்
என்பது!

***

தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!


***

அருவி
மலைக் காதலிக்கு
மழைக் காதலன்
சூட்டிய
மல்லிகை !

***
அவள் எனக்கு பிடிக்கவில்லை !
எத்தனை
பெண் பார்க்கும் படலம்
என்னவளுக்கு ...
விரைவில்
வீட்டில்
சொல்லியாக வேண்டும்!
உன்னை
பார்த்துவிட்டுச் சென்ற
எல்லோரும்
"அவள் எனக்கு பிடிக்கவில்லை"
என்றுதான்
சொல்லியிருக்கிறார்கள் ...
ஆமாம்...
யாருக்குமே
பிடிக்காத உன்னை
எனக்கு மட்டும்
எப்படி பிடித்துப் போனது?
ஓ..
இதுதான்
காதலோ !!!
*** 
BY YOURS RAJAN

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment