பிரிவுகளை கொஞ்சம்
பிரியமாய் நேசியுங்களே.
வண்டுத் தேரேறி
பிரிந்து செல்லாத
மகரந்தத் துகள்களுக்கேது
மறுபிறப்பு ?
மேகத்தின் தேகம் விட்டு
பிரிய மறுக்கும்
ஈரத் துளிகளுக்கு
இங்கேது சிறப்பு ?
விதைகளை விட்டு
வெளியேறட்டும் கிளைகள்,
மூங்கிலை விட்டு
வெளியேறட்டும் இசைகள்,
பாறைவிட்டு
வெளிக்குதிக்கட்டும் சிலைகள்,
இதயம் விட்டு
வெளித்தாவட்டும் கலைகள்
தடுக்காதீர்கள்.
முட்டையோடான
பிரிவு
சிறகுச் சரித்திரத்தின்
முதல் சுவடு.
பிரியவிடுங்கள்,
இல்லையேல் பிரித்துவிடுங்கள்,
தொப்புள் கொடியை
யாரும்
தொடரவிடுவதில்லையே !
பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment