Saturday, February 6, 2010

♥ : பெண் மனம்

 
picture for poem
பெண் மனம் 
---------------- 

சக்தியின் மறுவடிவமாய் 
கலைகளின் உறைவிடமாய் 
எழுத்திலும் ஏட்டிலும் 
அழகாய் தான் இருக்கிறாள் 
நாற்பதாயிரம் மனைவியருள் 
ஒருத்தியாய் 
நாற்புறமும் வேட்டை நாய்கள் 
சூழப் பரிதவிக்கும் 
ஒற்றை மானாய் 
நீரில்லா மீனாய் 
செல்லரித்துப் போன சமூகத்தால் 
சிதைக்கப் படுகிறாள்! 
கல்வி கலவி கடமை என 
எந்தச் சூழலிலும் 
பிறர் வடிக்கும் 
ஓவியத்த்திற்கு நிறமாய் 
மட்டுமே பொருந்துகிறாள்! 
நிறத் தேர்வும் இவளதல்ல! 
தனக்கேற்ற தேவையை 
பெண்ணுக்கான வாழ்வாய் 
மொழிகிறது சமூகம் 
வந்ததன் நோக்கம் அறியாமலே 
வாழ்ந்து முடிக்கிறாள் பெண் 
கறையான் அரித்த கோட்டையாய் 
காற்றில் கரைந்து போகிறாள்! 
செயப்படு பொருளாயிருத்தல் இயல்பு 
செய்பொருளானால் இழிவாய்க் கொள்ளும் 
மனித வர்க்கம்! 
பெண்மைச் சிதைவுக்கும் 
பெண் மனச் சிதைவுக்கும் 
பெரிதும் இல்லை வித்தியாசம்! 
இந்த உலகிற்கு 
பெண்மை தேவைப்படுகிறது 
பெண் மனம் தான் 
தேவைப்படுவதில்லை!! 

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment